search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகூரில் தென்பெண்ணையாற்றில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்- 3 பேர் கைது
    X

    பாகூரில் தென்பெண்ணையாற்றில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்- 3 பேர் கைது

    பாகூர் அருகே தென்பெண்ணையாற்றில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
    பாகூர்:

    பாகூர் அருகே சோரியாங்குப்பம் தென் பெண்ணை ஆற்றில் மணல் அள்ள புதுவை அரசு தடை விதித்துள்ளது. அதே வேளையில் நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கத்தில் தமிழக அரசு சார்பில் மணல் குவாரி செயல்படுகிறது.

    இந்த மணல் குவாரியில் புதுவையை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் அள்ள அனுமதிப்பது இல்லை.

    இதனால் தென் பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள புதுவையை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் அரசை வலியுறுத்தி வருகிறார்கள். இதையடுத்து மணமேடு பகுதியில் மணல் குவாரி திறக்க புதுவை மாவட்ட துணை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த நிலையில் தடை விதிக் கப்பட்ட சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஆராய்ச்சிகுப்பம் வழியாக 6 மாட்டு வண்டி கள் மூலம் மணல் கடத்தப்படு வதாக பாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுரு நாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீ சாரை பார்த்ததும் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். 3 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பிடிபட்ட 3 பேர் சோரியாங்குப்பத்தை சேர்ந்த ராஜி (28), சின்ன ஆராய்ச்சிகுப்பத்தை சேர்ந்த சாம்ராஜ் (40) மற்றும் பொன்னுதுரை (48) என்பதும் தப்பி ஓடியவர்கள் சின்ன ஆராய்ச்சிகுப்பத்தை சேர்ந்த ராமதாஸ், பாலு என்ற பாலுமகேந்திரன், மணி ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடிவருகிறார் கள்.

    மேலும் 6 மாட்டு வண்டி களையும் பறிமுதல் செய்து வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். #tamilnews
    Next Story
    ×