என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூரில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை- மர்ம மனிதர்கள் கைவரிசை
Byமாலை மலர்1 Sep 2018 10:23 AM GMT (Updated: 1 Sep 2018 10:23 AM GMT)
கடலூரில் வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் நள்ளிரவில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர், கம்மியம்பேட்டை கெடிலம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 60). இவரது மகன்கள் கண்ணன், துரைராஜ்.
இவர்கள் 3 பேரும் ஒரே காம்பவுண்டில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகிறார்கள். 3 பேர் குடும்பத்தினரும் வீடுகளை பூட்டி விட்டு நாமக்கல்லில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டனர்.
இதையறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவில் கண்ணனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை- பணத்தை கொள்ளையடித்தனர்.
பின்னர் அவர்கள் அருகில் இருந்த துரை ராஜ், ஜெயராமன் ஆகியோரின் வீட்டு கதவுகளையும் உடைக்க முயன்றனர். அப்போது அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்ததும் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இன்று காலை கண்ணன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் நாமக்கல் சென்றிருந்த கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
நாமக்கல் சென்றிருந்த ஜெயராமன் துரைராஜ், கண்ணன் ஆகியோர் கடலூர் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வந்த பின்னர்தான் வீட்டில் கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு தெரிய வரும்.
நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர், கம்மியம்பேட்டை கெடிலம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 60). இவரது மகன்கள் கண்ணன், துரைராஜ்.
இவர்கள் 3 பேரும் ஒரே காம்பவுண்டில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகிறார்கள். 3 பேர் குடும்பத்தினரும் வீடுகளை பூட்டி விட்டு நாமக்கல்லில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டனர்.
இதையறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவில் கண்ணனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை- பணத்தை கொள்ளையடித்தனர்.
பின்னர் அவர்கள் அருகில் இருந்த துரை ராஜ், ஜெயராமன் ஆகியோரின் வீட்டு கதவுகளையும் உடைக்க முயன்றனர். அப்போது அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்ததும் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இன்று காலை கண்ணன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் நாமக்கல் சென்றிருந்த கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
நாமக்கல் சென்றிருந்த ஜெயராமன் துரைராஜ், கண்ணன் ஆகியோர் கடலூர் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வந்த பின்னர்தான் வீட்டில் கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு தெரிய வரும்.
நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X