என் மலர்

    செய்திகள்

    தமிழகத்தில் குடும்ப ஆட்சி வரவிடாமல் தடுப்போம்- டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
    X

    தமிழகத்தில் குடும்ப ஆட்சி வரவிடாமல் தடுப்போம்- டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வருகிற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் புதிய தமிழகம் ஈடுபடும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். #krishnasamy #tamilnadugovernment

    நெல்லை:

    நெல்லையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர்கள் 6 வித பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் 77 ஜாதி பட்டியலில் உள்ள பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெற்று வருகிறார்கள். தேவேந்திரகுல வேளாளர்களை தனியாக பிரித்து பிற்பட்டோர்பட்டியலில் சேர்க்க வேண்டும். பின்னர் அதற்கு தக்க பிற்பட்டோர் பிரிவு இடஒதுக்கீடு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். இதை வலியுறுத்தி அக்டோபர் 6-ந் தேதி திருச்சியில் இளைஞரணி மாநாட்டில் வலியுறுத்துவோம்.

    சமீபத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் 1980-81 ம் ஆண்டு நடந்த மீனாட்சிபுரம் மதமாற்ற சம்பவத்தை ஆய்வு செய்து அதற்காக ஒருவருக்கு டாக்டர் பட்டம் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதில் பல தவறுகள் நடந்துள்ளது. உடனடியாக இதை நிறுத்தவேண்டும். வருகிற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் புதிய தமிழகம் ஈடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #krishnasamy #tamilnadugovernment

    Next Story
    ×