search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் விவகாரம் - பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மனு - சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
    X

    ஸ்டெர்லைட் விவகாரம் - பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மனு - சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

    ஸ்டெர்லைட் அலை விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையிடு மனு தாக்கல் செய்துள்ளது. #ThoothukudiIncident #SterliteProtest

    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிபதி எஸ்.ஜே. வசிப்தார் தலைமையில் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.ஜே. வசிப் தார் பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியாவார்.

    நீதிபதி வசிப்தார் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.


    இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையிடு மனு தாக்கல் செய்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா கூறுகையில், நீதிபதி வசிப்தார் பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணை நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. ஆனால் அவர் தன்னிச்சையாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி இருப்பதை ஏற்க முடியாது என்றார். #ThoothukudiIncident #SterliteProtest

    Next Story
    ×