search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் முதுநகரில் கார்கள் - மினிலாரி மோதல்- 6 பேர் படுகாயம்
    X

    கடலூர் முதுநகரில் கார்கள் - மினிலாரி மோதல்- 6 பேர் படுகாயம்

    கடலூர் முதுநகரில் கார்கள் மீது மினிலாரி மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் மோகினி பாலம் அருகே நேற்று இரவு 12 மணியளவில் ஒரு மினிலாரி சென்றது. அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிரே வந்த கார்கள் மீது மோதியது. 

    இந்த விபத்தில் மேல்புவனகிரியை சேர்ந்த சிவக்குமார்(44), ரவிக்குமார்(40) மற்றும் வரதராஜன்(68), சுதா, லோகநாதன், அமுதா ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் கடலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    இந்த விபத்து குறித்து முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×