search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே தேர்வு எழுத சென்ற கல்லூரி மாணவி மாயம்
    X

    தேனி அருகே தேர்வு எழுத சென்ற கல்லூரி மாணவி மாயம்

    தேனி அருகே கல்லூரிக்கு தேர்வு எழுதச்சென்ற மாணவி மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
    தேனி:

    தேனி அருகே பத்ரகாளிபுரம் பகுதியை சேர்ந்தவர் காளிராஜ் மகள் கலைச்செல்வி(வயது17). தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரியில் இன்டர்னெல் தேர்வு நடைபெற்று வருகிறது.

    தேர்வு எழுத செல்வதாக கலைச்செல்வி வீட்டில் கூறிச்சென்றுள்ளார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. எனவே அவரது தந்தை காளிராஜ் கல்லூரி நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால் மாணவி தேர்வு முடிந்து சென்றுவிட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் பத்ரகாளிபுரத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×