search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் எலி கடித்ததால் காயமடைந்த பயணிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க ரெயில்வேக்கு உத்தரவு
    X

    ரெயிலில் எலி கடித்ததால் காயமடைந்த பயணிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க ரெயில்வேக்கு உத்தரவு

    ரெயிலில் எலி கடித்ததால் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு மற்றும் வழக்கு செலவை வழங்கும்படி ரெயில்வே துறைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Railways
    சேலம்:

    சேலத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி சென்னைக்கு ரெயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரை எலி கடித்துள்ளது. இதனால் காயமடைந்த அவர், டிக்கெட் பரிசோதகரிடம் கூறியபோது முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்யவில்லை. அடுத்த ரெயில் நிலையத்தில்தான் சிகிச்சை பெற முடியும் என்று கூறியிருக்கிறார்.

    கடைசியாக எழும்பூர் ரெயில் நிலையம் வந்ததும், இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். முதலில் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அதேசமயம், எலி கடித்ததால் மனவேதனை அடைந்ததாகவும், இதற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சேலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டார். 4 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் இப்போது நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    எலி கடித்ததால் பாதிக்கப்பட்ட பயணி வெங்கடாச்சலத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, மருத்துவச் செலவிற்கு ரூ.2 ஆயிரம் மற்றும் வழக்கு செலவிற்காக ரூ.5 ஆயிரம் வழங்கும்படி ரெயில்வே துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த தொகையை மூன்று மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். Railways
    Next Story
    ×