search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.வி.குப்பம் அருகே மாணவியை கடத்தி பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
    X

    கே.வி.குப்பம் அருகே மாணவியை கடத்தி பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

    மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    குடியாத்தம்:

    கே.வி.குப்பம் அடுத்த பசுமாத்துர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி குடியாத்தம் அரசு மகளிர் மேல் நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் 15 நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பவில்லை. தன் மகளை கண்டுபிடித்து தருமாறு மாணவியின் தந்தை கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் 17 நாட்களுக்கு பிறகு மாணவியை சென்னையில் மீட்டு கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவியை கடத்தியது அதே பகுதியைச் சேர்ந்த ஹிட்லர் என்பவரின் மகன் ராஜசேகர் என்பது தெரியவந்தது. இவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.

    Next Story
    ×