search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்
    X

    ஆம்பூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்

    ஆம்பூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த வடச்சேரி பகுதியை சேர்ந்தவர் ரகுபதி மகன் ஞானமூர்த்தி (வயது 23). மேஸ்திரி. இவரும், அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் நந்தினி (19) என்ற இளம்பெண்ணும் காதலித்து 1½ ஆண்டிற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 8 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நேற்றிரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஞானமூர்த்தி மனைவியை தாக்கியுள்ளார். நள்ளிரவு வரை சண்டை நீடித்தது. அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்த போது நந்தினி தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தார்.

    உமராபாத் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து ஞானமூர்த்தி மற்றும் அவரது தாய் உமா (50) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×