என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்பூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்
Byமாலை மலர்28 Aug 2018 9:39 AM GMT (Updated: 28 Aug 2018 9:39 AM GMT)
ஆம்பூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த வடச்சேரி பகுதியை சேர்ந்தவர் ரகுபதி மகன் ஞானமூர்த்தி (வயது 23). மேஸ்திரி. இவரும், அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் நந்தினி (19) என்ற இளம்பெண்ணும் காதலித்து 1½ ஆண்டிற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 8 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஞானமூர்த்தி மனைவியை தாக்கியுள்ளார். நள்ளிரவு வரை சண்டை நீடித்தது. அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்த போது நந்தினி தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தார்.
உமராபாத் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து ஞானமூர்த்தி மற்றும் அவரது தாய் உமா (50) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அடுத்த வடச்சேரி பகுதியை சேர்ந்தவர் ரகுபதி மகன் ஞானமூர்த்தி (வயது 23). மேஸ்திரி. இவரும், அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் நந்தினி (19) என்ற இளம்பெண்ணும் காதலித்து 1½ ஆண்டிற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 8 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஞானமூர்த்தி மனைவியை தாக்கியுள்ளார். நள்ளிரவு வரை சண்டை நீடித்தது. அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்த போது நந்தினி தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தார்.
உமராபாத் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து ஞானமூர்த்தி மற்றும் அவரது தாய் உமா (50) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X