search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பராமரிப்பு பணிக்காக சென்னை விமான நிலைய ஓடுபாதை தினமும் 6 மணி நேரம் மூடப்படும் - அதிகாரிகள் தகவல்
    X

    பராமரிப்பு பணிக்காக சென்னை விமான நிலைய ஓடுபாதை தினமும் 6 மணி நேரம் மூடப்படும் - அதிகாரிகள் தகவல்

    பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள சென்னை விமான நிலைய ஓடுபாதை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 6 மணி நேரம் மூடி வைக்க முடிவு செய்யப்பட்டது. #ChennaiAirport #Runway
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்கள் வந்து செல்ல 2 ஓடுபாதைகள் உள்ளன. முதல் பிரதான ஓடுபாதை 3,658 மீட்டர் நீளமும், 2-வது துணை ஓடுபாதை 2,890 மீட்டர் நீளமும் கொண்டது. இந்த ஓடுபாதையில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு தினமும் 426 விமானங்கள் வந்து செல்லும்.

    முதல் பிரதான ஓடுபாதையை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 6 மணி நேரம் பிரதான ஓடுபாதையை மூடி வைக்க முடிவு செய்யப்பட்டது.

    பராமரிப்புக்காக 6 மணி நேரம் ஓடுபாதை மூடினாலும் எந்தவித பாதிப்பின்றி விமான போக்குவரத்து சேவை 2-வது ஓடுபாதையில் செயல்படும். பெரிய ரக விமானங்கள் பயன்பாட்டுக்கு மட்டும் முதல் பிரதான ஓடுபாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு விமான சேவைக்கு அனுமதிக்கப்படும்.

    இந்த ஓடுபாதை பராமரிப்பு பணிகள் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்
    Next Story
    ×