search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ விழிப்புணர்வு பேரணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    திருப்பூரில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ விழிப்புணர்வு பேரணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்

    திருப்பூரில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம், திருப்பூர் நொய்யல் ஆறு பகுதியில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாக்கும் வகையில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கலெக்டர் டாக்டர் பழனிசாமி, குணசேகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் உடுமலை. ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:-

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு நாம் உள்ளாகின்றோம். தூய்மையான தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்றால் ஒரு முறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரமான வாழ்க்கையினை நாம் வாழ முடியும். எனவே பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முழுமையாக தவிர்த்து ஆரோக்கியமாக வாழ வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    முன்னதாக, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழியை அமைச்சர், கலெக்டர் முன்னிலையில் ஏற்கப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் துணி பைகளை பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

    தொடர்ந்து, நொய்யல் ஆற்றை தூய்மைபடுத்தும் பணியினையும் அவர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் .பிரசன்னா ராமசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் செந்தில் விநாயகம், (திருப்பூர் வடக்கு), சண்முகம் (திருப்பூர் தெற்கு), உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் உதய குமார், வனஜா, உதவி பொறி யாளர்கள் லாவண்யா, கார்த்திக், வினோத், பாரதிராஜா, தாசில்தார்கள் ஜெயக்குமார் ( திருப்பூர் வடக்கு), ரவிச்சந்திரன் (திருப்பூர் தெற்கு), சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×