search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவுக்கு 10 லாரிகளில் அம்மா குடிநீர்- அமைச்சர்கள் கொடியசைத்து அனுப்பினர்
    X

    கேரளாவுக்கு 10 லாரிகளில் அம்மா குடிநீர்- அமைச்சர்கள் கொடியசைத்து அனுப்பினர்

    கோவையில் இருந்து கேரளாவுக்கு 10 லாரிகளில் அம்மா குடிநீரை அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கேரளாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழை மாநிலத்தையே உலுக்கியது. வெள்ளத்தில் சிக்கி 370-க்கும் மேற்பட் டோர் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

    இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கடந்த வாரம் ரூ.4 கோடி மதிப்பில் 42 வகையான நிவாரணப் பொருட்கள் 30-க்கும் மேற்பட்ட லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது. அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் 10 லாரிகளில் இந்த குடிநீரை கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க் கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், ஓ.கே. சின்னராஜ், கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன், மாசுகட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர்கள் மணிமாறன், மணி வண்ணன், கோவை அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் முத்து கிருஷ்ணன், பொது மேலாளர்கள் கோவிந்தராஜ், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர்கள் முன்பு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

    Next Story
    ×