search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேச்சு- இந்து அமைப்பினர் 2 பேர் திடீர் கைது
    X

    மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேச்சு- இந்து அமைப்பினர் 2 பேர் திடீர் கைது

    தண்டையார்பேட்டையில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய இந்து அமைப்பினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே கடந்த 19-ந்தேதி பாரத் முன்னணி என்ற இந்து அமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் பல்வேறு இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

    அவர்களது பேச்சு மதக் கலவரத்தை தூண்டும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்படியும் இருந்ததாக ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு இந்துமக்கள் சேனா தலைவர் சரவணன், ருத்ர சேனா தலைவர் தங்கராஜ், பாரத் முன்னணி சண்முகம், சத்யசேனா பொதுச் செயலாளர் ராஜகோபால் ஆகிய 4 பேர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு தஞ்சாவூரில் இருந்த சரவணன், தங்கராஜ் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை விசாரணைக்காக ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் இன்று காலை பல்வேறு இந்து அமைப்பினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையொட்டி பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். #tamilnews
    Next Story
    ×