என் மலர்
செய்திகள்

கோவில்பட்டி அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது
கோவில்பட்டி அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் வடக்குத் தெருவைச் சேர்ந்த சிங்காரவடிவேல் மனைவி பகவதி(வயது 46). இவரது வீட்டருகே குடியிருந்து வரும் கட்டிடத்தொழிலாளி கணேசன். இவரது மனைவி மாரிலட்சுமி.
இந்நிலையில், பகவதி தன்னை தவறான வழிக்கு அழைப்பதாக மாரிலட்சுமி அவரது கணவர் கணேசனிடம் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 19-ந் தேதி பகவதி வீட்டிற்கு சென்ற கணேசன் தன் மனைவியை தவறான வழிக்கு அழைத்த பகவதியை அவதூறாகப் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பகவதி அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கட்டிடத் தொழிலாளி கணேசனை கைது செய்தனர்.
Next Story






