என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு - கோவை வழியாக கேரளா செல்லும் 6 ரெயில்கள் ரத்து
    X

    கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு - கோவை வழியாக கேரளா செல்லும் 6 ரெயில்கள் ரத்து

    கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கோவை வழியாக கேரளா செல்லும் 6 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு பல இடங்களில் ரெயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளது.

    இதனால் கேரளாவுக்கு கோவை வழியாக செல்லும் ரெயில்களின் சேவை கடந்த 4 நாட்களுக்கு மேலாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சில ரெயில்கள் ஈரோடு, மதுரை, நெல்லை நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

    மேலும் ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.

    எனவே சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் பாதுகாப்பு கருதி கோவை வழியாக கேரளாவுக்கு செல்லும் ரெயில் சேவை ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் விவரம் வருமாறு

    கண்ணூர்- ஆலப்புலா எக்ஸ்பிரஸ், கண்ணூர்- திருவனந்தபுரம் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்- கண்ணூர் எக்ஸ்பிரஸ், மங்களூர்- நாகர்கோவில் ஏர்நாடு எக்ஸ்பிரஸ், கொச்சிவேலி-யஸ்வந்பூர் எக்ஸ்பிரஸ்,

    எர்ணாகுளம்- பெங்களூர் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 6 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×