search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊசூர் அருகே போதையில் தகராறு செய்த வாலிபர் கொலை- அண்ணன் கைது
    X

    ஊசூர் அருகே போதையில் தகராறு செய்த வாலிபர் கொலை- அண்ணன் கைது

    ஊசூர் அருகே போதையில் தகராறு செய்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    வேலூர் அடுத்த ஊசூர் அருகே உள்ள வீசுவெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன்கள் செந்தில் (வயது 29), ராஜேஷ்(24) கூலி தொழிலாளிகள்.

    ராஜேசுக்கு குடிபழக்கம் இருந்தது நேற்று மாலை மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனை செந்தில் தட்டிக்கேட்டார். இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் கத்தியால் ராஜேசை வெட்டினார். வயிறு, கழுத்தில் வெட்டுக்காயமடைந்த ராஜேஷ் தரையில் சாய்ந்தார்.

    அரியூர் போலீசார் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜேஷ் இறந்தார்.

    அரியூர் போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து செந்திலை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×