என் மலர்

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் பாதை பூந்தமல்லி வரை நீட்டிப்பு
    X

    மெட்ரோ ரெயில் பாதை பூந்தமல்லி வரை நீட்டிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னை மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பயணிகள் பயன்பெறும் வகையில் தற்போது 2-வது கட்டமாக அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதை பூந்தமல்லி வரை நீட்டிக்கப்பட உள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்திற்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ் வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள், பொதுமக்கள் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு பெரிதும் வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. 2-வது கட்டமாக ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் மாதவரம்- சிறுசேரி வரை ரூ.85 ஆயிரம் கோடி செலவில் 105 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் மாதவரம்- சிறுசேரி, ஆயிரம்விளக்கு- வளசரவாக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

    இந்தநிலையில் வளசரவாக்கம்-பூந்தமல்லி வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.3850 கோடி செலவில் 13 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படுகிறது. காரம்பாக்கம், போரூர் ஜங்‌ஷன், ஸ்ரீராமச்சந்திரா ஆஸ்பத்திரி, ஐயப்பன் தாங்கல் டெப்போ, காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, முல்லை தோட்டம், பூந்தமல்லி பை பாஸ் உள்பட 10 மெட்ரோ ரெயில்நிலையங்கள் உருவாக்கப்படுகிறது.


    மெட்ரோ ரெயில் திட்டம் பூந்தமல்லி வரை நீட்டிக்கப்படுவதால் சென்னை மேற்கு பகுதியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பயணிகள் பெரிதும் பயன் பெறுவார்கள்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மாதவரம்-சிறுசேரி வரை 2-வது கட்டமாக ரூ.85 ஆயிரம் கோடி செலவில் 3 வழித்தடப்பாதை வழியாக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்படுகிறது. சென்னை மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பயணிகள் பயன்பெறும் வகையில் தற்போது பூந்தமல்லி வரை மெட்ரோ ரெயில் பாதை நீட்டிக்கப்படுகிறது.

    ரூ.3850 கோடி மதிப்பீட்டில் 13 கி.மீட்டர் தூரத்துக்கு சுரங்க மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது. இதில் 10 மெட்ரோ ரெயில்நிலையங்கள் கட்டப்படுகிறது. பல வங்கி கடன் நிதிஉதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    Next Story
    ×