என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே அடுத்தடுத்த வீடுகளில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள முள்ளிப்பாடி ஏழுமலையான் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது48). கார்பண்டர் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு மர்ம நபர் இவரது வீட்டிற்குள் நைசாக உள்ளே நுழைந்தார். ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு செல்ல முயன்றபோது அவர் திடுக்கிட்டு எழுந்தார். உடனே அவனை பிடிப்பதற்காக எழுந்து ஓடினார்.
தனது மனைவி ஓடுவதை பார்த்து கணவரும் பின்னால் ஓடினார். ஆனால் வாசலில் நின்றிருந்த மற்றொரு ஆசாமி அவர்கள் மீது கல்லை தூக்கி போட வந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டிற்குள் சென்று விட்டனர். அப்போது அவர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர்.
கொள்ளையடித்த நபர்கள் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருந்ததாக பழனிச்சாமி தெரிவித்தார்.
மேலும் இங்கு கொள்ளையடிப்பதற்கு முன்பாக தாமரைப் பாடியிலும் ஒரு வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அந்த வீட்டில் நகை, பணம் எதுவும் சிக்காததால் அக்கும்பல் தப்பி ஓடியது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செம்பட்டி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த தம்பதியை தாக்கி முகமூடி கொள்ளையர் பணம் பறித்து சென்றனர்.
எனவே அதை போன்ற முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் அதே நபர்கள் இக்கொள்ளையில் ஈடுபட்டனரா? என்று திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்