என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செவ்வாப்பேட்டை அருகே செல்போன் கோபுரங்களில் பேட்டரி திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்2 Aug 2018 6:08 AM GMT
செவ்வாப்பேட்டை அருகே உள்ள பகுதிகளில் செல்போன் கோபுரங்களில் இருந்து பேட்டரி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செவ்வாப்பேட்டை:
செவ்வாப்பேட்டையை அடுத்துள்ள வேப்பம்பட்டு, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள செல்போன் கோபுரங்களில் இருந்து பேட்டரிகள் திருட்டு போயின.
இதுபற்றி வந்த புகார்களின் அடிப்படையில் செவ்வாய்பேட்டை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அந்த பகுதியில் இருக்கும் செல்போன் கோபுரங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
நேற்று செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் அங்குள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏற முயன்றார்.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை நெருங்கினார்கள். ஆனால் அதற்குள் அவர் ஓடத் தொடங்கினார். அவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவருடைய பெயர் பால்ராஜ் (29) பட்டாபிராம் காந்தி நகரைச் சேர்ந்தவர். இவர்தான் செல்போன் கோபுரங்களில் பேட்டரி திருடி வந்தார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கைதான பால்ராஜை போலீசார் அழைத்துச் சென்று அவருடைய வீட்டில் சோதனையிட்டனர். அப்போது ரூ.3 லட்சம் மதிப்புள்ள செல்போன் கோபுர பேட்டரிகள் இருப்பது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்தனர். வாலிபர் பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா? இதுவரை திருடிய பாட்டரிகள் எத்தனை? அவற்றை எங்கு விற்பனை செய்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
செவ்வாப்பேட்டையை அடுத்துள்ள வேப்பம்பட்டு, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள செல்போன் கோபுரங்களில் இருந்து பேட்டரிகள் திருட்டு போயின.
இதுபற்றி வந்த புகார்களின் அடிப்படையில் செவ்வாய்பேட்டை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அந்த பகுதியில் இருக்கும் செல்போன் கோபுரங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
நேற்று செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் அங்குள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏற முயன்றார்.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை நெருங்கினார்கள். ஆனால் அதற்குள் அவர் ஓடத் தொடங்கினார். அவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவருடைய பெயர் பால்ராஜ் (29) பட்டாபிராம் காந்தி நகரைச் சேர்ந்தவர். இவர்தான் செல்போன் கோபுரங்களில் பேட்டரி திருடி வந்தார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கைதான பால்ராஜை போலீசார் அழைத்துச் சென்று அவருடைய வீட்டில் சோதனையிட்டனர். அப்போது ரூ.3 லட்சம் மதிப்புள்ள செல்போன் கோபுர பேட்டரிகள் இருப்பது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்தனர். வாலிபர் பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா? இதுவரை திருடிய பாட்டரிகள் எத்தனை? அவற்றை எங்கு விற்பனை செய்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X