என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி பணம் பறித்த கும்பல்- தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை
Byமாலை மலர்1 Aug 2018 11:49 AM GMT (Updated: 1 Aug 2018 11:49 AM GMT)
டாஸ்மாக் சூப்பர்வைசர் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ. 3லட்சத்து 40 ஆயிரத்தை பறித்து சென்ற 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் முத்தூர் -கொடுமுடி ரோட்டில் வாய்க்கால் மேடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இக்கடையின் சூப்பர்வைசராக முத்தூரை சேர்ந்த கார்த்தி (33) பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று கடையில் வசூலான பணத்தையும், காங்கயம் ரோட்டில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தையும் எடுத்து கொண்டு நத்தக் காடையூரில் உள்ள வங்கியில் செலுத்த மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் புதுப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் டாஸ்மாக் சூப்பர்வைசர் கார்த்தியை உதைத்து கீழே தள்ளி விட்டனர்.அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி அவரிடமிருந்து ரூ. 3 லட்சத்து 40 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் காயம் அடைந்த கார்த்தி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. பணம் பறித்த கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். டாஸ்மாக் சூப்பர் வைசர் பணம் கொண்டு செல்வதை நன்கு அறிந்தவர்கள் தான் அவரை தாக்கி பணத்தை பறித்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
திருப்பூர் மாவட்டம் முத்தூர் -கொடுமுடி ரோட்டில் வாய்க்கால் மேடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இக்கடையின் சூப்பர்வைசராக முத்தூரை சேர்ந்த கார்த்தி (33) பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று கடையில் வசூலான பணத்தையும், காங்கயம் ரோட்டில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தையும் எடுத்து கொண்டு நத்தக் காடையூரில் உள்ள வங்கியில் செலுத்த மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் புதுப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் டாஸ்மாக் சூப்பர்வைசர் கார்த்தியை உதைத்து கீழே தள்ளி விட்டனர்.அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி அவரிடமிருந்து ரூ. 3 லட்சத்து 40 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் காயம் அடைந்த கார்த்தி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. பணம் பறித்த கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். டாஸ்மாக் சூப்பர் வைசர் பணம் கொண்டு செல்வதை நன்கு அறிந்தவர்கள் தான் அவரை தாக்கி பணத்தை பறித்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X