என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிகிச்சை பெறும் தா.பாண்டியனை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். 86 வயதான அவர் கடந்த 28-ந்தேதி காலை வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தா.பாண்டியனை அவரது உறவினர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு டாக் டர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மூச்சு திணறல் மற்றும் சிறுநீரக பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வரும் தா.பாண்டியனை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதேபோல இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜாவும் நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அரசு பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் தா.பாண்டியனை நேரில் சந்தித்தார். அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரும் நலம் விசாரித்தனர்.
இதேபோல ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் தா.பாண்டியனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். #edappadipalanisamy #thapandian
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்