search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர் மேலாண்மை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்- கலெக்டர் உத்தரவு
    X

    நீர் மேலாண்மை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்- கலெக்டர் உத்தரவு

    தமிழக அரசு செயல்படுத்தும் நீர் மேலாண்மை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் சார்பில் பருவநிலை மாற்றம் குறித்த கல்வியறிவு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பருவநிலை மாற்றமும், வேளாண்மையும் என்ற கையேட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பருவநிலை மாற்றத்தால் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை விவசாயிகள் எதிர்கொள்வது குறித்தும் உரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இடர்களை குறைக்க விவசாயிகள் பயிர் பரவலாக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பயிர் மற்றும் வானிலை சார்ந்த ஆலோசனைகளை பெற்று தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் கிராமங்களில் தமிழக அரசு செயல்படுத்தும் நீர் மேலாண்மை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் நீர்நிலை மேலாண்மையை சிறப்பாக கையாண்டால் பருவநிலை மாற்றத்தினை சிறப்பாக கையாள முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×