என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேலம் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து கார் டிரைவர் தற்கொலை
சேலம்:
சேலம் கோரிமேடு ஜெயாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் மகன் தினேஷ்பாபு (வயது 35). கார் டிரைவர். இவரது மனைவி அருணா. இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. தினேஷ் பாபு நேற்று மது அருந்தி வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் அருணா கோபத்தில் வீட்டின் வெளியே இருந்தார். அப்போது வீட்டை பூட்டி கொண்டு தினேஷ்பாபு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து அவரது மனைவி கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விசாரணை நடத்தியதில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் லால்குடிக்கு காரில் 2 பேரை அழைத்து சென்றார். அப்போது கார் விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் பலியானார்கள். இந்த வழக்கு விசாரணை விரைவில் வர உள்ளது. இதற்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்