என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த வாலிபர் மாயம்
Byமாலை மலர்28 July 2018 9:20 AM GMT (Updated: 28 July 2018 9:20 AM GMT)
திருத்துறைப்பூண்டி அருகே முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த வாலிபர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியை சேர்ந்தவர் தேவராஜன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இவரது மகள் லாவண்யா. இவரும் ஆலத்தம்பாடியை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது இந்த நிலையில் தனது திருமணத்தை மறைத்து விக்னேஷ் கோட்டூரை சேர்ந்த தனது அத்தை மகளை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாராம். இதையறிந்த அவரது அத்தை விக்னேஷ் ஏமாற்றி திருமணம் செய்தது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார். இது குறித்து விசாரணைக்காக விக்னேஷை போலீசார் அழைத்துச் சென்றனர். பின்னர் விக்னேஷ் தலைமறைவானார்.
தனது கணவரை இரண்டாவது மனைவியின் உறவினர்கள் கடத்தி சென்று விட்டதாகவும் கண்டுபிடித்து தர வேண்டுமென்று லாவண்யா திருத்துறைப்பூண்டி போலீசில் புகார்செய்தார். இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் முருகதாஸ் தலைமையில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் ,மவட்ட செயற்குழு முருகானந்தம் , ஒன்றிய செயலாளர்கள் காரல்மார்க்ஸ், ராமச்சந்திரன், நகர செயலாளர் ரகுராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. இனிக்கோதிவ்யன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. #tamilnews
திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியை சேர்ந்தவர் தேவராஜன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இவரது மகள் லாவண்யா. இவரும் ஆலத்தம்பாடியை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது இந்த நிலையில் தனது திருமணத்தை மறைத்து விக்னேஷ் கோட்டூரை சேர்ந்த தனது அத்தை மகளை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாராம். இதையறிந்த அவரது அத்தை விக்னேஷ் ஏமாற்றி திருமணம் செய்தது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார். இது குறித்து விசாரணைக்காக விக்னேஷை போலீசார் அழைத்துச் சென்றனர். பின்னர் விக்னேஷ் தலைமறைவானார்.
தனது கணவரை இரண்டாவது மனைவியின் உறவினர்கள் கடத்தி சென்று விட்டதாகவும் கண்டுபிடித்து தர வேண்டுமென்று லாவண்யா திருத்துறைப்பூண்டி போலீசில் புகார்செய்தார். இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் முருகதாஸ் தலைமையில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் ,மவட்ட செயற்குழு முருகானந்தம் , ஒன்றிய செயலாளர்கள் காரல்மார்க்ஸ், ராமச்சந்திரன், நகர செயலாளர் ரகுராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. இனிக்கோதிவ்யன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X