என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் அரசு ஆஸ்பத்திரி நர்சிடம் 5 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்28 July 2018 8:30 AM GMT (Updated: 28 July 2018 8:30 AM GMT)
பஸ்சுக்காக காத்திருந்த அரசு ஆஸ்பத்திரி நர்சிடம் 5 பவுன் நகையை மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
மதுரை:
மதுரை எஸ்.ஆலங்குளம் டெலிபோன் காலனியைச் சேர்ந்தவர் சலீம். இவரது மனைவி மகபூப்ஜான் (வயது 53). இவர் கருங்காலக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று காலையில் மகபூப்ஜான் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக வீட்டின் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று மகபூப்ஜான் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை நகரில் நாள் தோறும் வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். #tamilnews
மதுரை எஸ்.ஆலங்குளம் டெலிபோன் காலனியைச் சேர்ந்தவர் சலீம். இவரது மனைவி மகபூப்ஜான் (வயது 53). இவர் கருங்காலக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று காலையில் மகபூப்ஜான் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக வீட்டின் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று மகபூப்ஜான் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை நகரில் நாள் தோறும் வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X