search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று ஆடி வெள்ளி - ஈரோடு அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
    X

    இன்று ஆடி வெள்ளி - ஈரோடு அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

    ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் விஷேச பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து அம்மனை பக்தர்கள் வழி படுவார்கள். #temple

    ஈரோடு:

    ஆடி மாதம் என்றலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் விஷேச பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து அம்மனை பக்தர்கள் வழி படுவார்கள்.

    வழக்கமாக வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் பெண் பக்தர்கள் அம்மன் கோவில்களுக்கு அதிகமாக வருவார்கள். இன்று ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

    இதையொட்டி ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிகாலை முதலே பக்தர்கள் குறிப்பாக பெண் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    மேலும் அன்னதானம், கூழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் திருவிழா போல காட்சி அளித்தது. மேலும் கோவிலில் விளக்கு பூஜையும் நடந்தது. இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர்.

    இதே போல பண்ணாரியம்மன் கோவில், கோபி அடுத்த பாரியூர் அம்மன், ஈரோடு சின்ன மாரியம்மன், நடு மாரியம்மன், சூரம்பட்டி மாரியம்மன், வீரப்பன் சத்திரம் மாரியம்மன், கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், ஓங்காளியம்மன், பார்க் ரோடு எல்லை மாரியம்மன், ராஜாஜி புரம் மாகாளியம்மன், கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவில் உள்பட ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஏரானமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். #temple

    Next Story
    ×