search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை வடக்கு தொகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகள்: ராஜன்செல்லப்பா தொடங்கி வைத்தார்
    X

    மதுரை வடக்கு தொகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகள்: ராஜன்செல்லப்பா தொடங்கி வைத்தார்

    மதுரை வடக்கு தொகுதியில் ரூ. 67.36 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளை ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மதுரை:

    மதுரை வடக்குத் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.67.36 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் தலைமையில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா இன்று திறந்து வைத்தார்.

    மதுரை வடக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட முனியாண்டி கோவில் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், சத்தியமூர்த்தி ஜீவா தெருவில் ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், சத்தியமூர்த்தி பிரதான தெரு மற்றும் தெற்கு குறுக்குத் தெருவில் தமிழ் நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.27.56 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    மேலும் சர்ச்ரோடு மற்றும் சக்திமாரியம்மன் கோவில் தெருவில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக்சாலையினையும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தெருவில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப் பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து சுத்திகரிப்பு குடிநீர் எந்திரம் பொருத்தப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1000 லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் சுத்திகரிக்கப்படுகிறது.

    வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் ரூ.67.36 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள் பொதுமக்களின் பயன் பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் அரசு, உதவி செயற்பொறியாளர் முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×