search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோவையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை

    கோவையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Policemansuicide #Suicidecase

    கோவை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 25). இவர் கோவை மாவட்டம் கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை பட்டாலியன் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்த போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து உயரதிகாரிகளுக்கும், குனியமுத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அமர்நாத் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    அமர்நாத் கடந்த 2016-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். பட்டாலியன் அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    நேற்று வேலை முடிந்ததும் இரவு 10 மணிக்கு முகாம் அலுவலகத்தில் உள்ள குடியிருப்புக்கு திரும்பிய நிலையில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அமர்நாத் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Policemansuicide #Suicidecase

    Next Story
    ×