என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் பள்ளியில் மாணவர்களுக்கான செஸ் போட்டி
ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான செஸ் போட்டி கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான செஸ் போட்டி கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றது. போட்டிக்கு கங்கை கொண்டசோழபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி போட்டியை பார்வையிட்டார். போட்டிகளில் நடுவர்களாக கண்ணதாசன், ஷாயின்ஷா, பாண்டியன், விஜய், ஆனந்த், கார்த்திக்ராஜன், பிரகாஷ், ராஜ், குமார், மோகன், சுப்ரமணியன், பழனிவேல் உள்பட பலர் பணியாற்றினர்.
குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் 11,14,17,19 ஆகிய வயது பிரிவுகளில் 40 பள்ளிகளை சேர்ந்த 249 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போட்டியிட்டனர். இறுதியில் கங்கை கொண்டசோழபுரம் உடற்கல்வி ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.
Next Story






