search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திசையன்விளை-கோவை அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை
    X

    திசையன்விளை-கோவை அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

    திசையன்விளையில் இருந்து கோவைக்கு நாசரேத் வழியாக செல்லும் அரசு பஸ்சை மீண்டும் இயக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

    நாசரேத்:

    திசையன்விளையில் இருந்து தினமும் மாலை 5.40 மணிக்கு அரசு விரைவு பஸ் புறப்பட்டு சாத்தான்குளம், நாசரேத், நெல்லை வழியாக கோவைக்கு சென்றது. இதே போல் கோவையில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்பட்டு நெல்லை, நாசரேத் வழியாக திசையன்விளைக்கு சென்றது. இந்த பஸ் கடந்த மே மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நாசரேத் நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் பீட்டர் கூறியதாவது:-

    திசையன்விளையில் இருந்து கோவைக்கு நாசரேத் வழியாக கடந்த சில ஆண்டுகளாக சென்று வந்த அரசு பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளதால் நாசரேத் - சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நாசரேத் வழியாக கோவைக்கு சென்ற முதல் அரசு விரைவு பஸ் ஆகும். இந்த பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×