search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பயணி பலி யார் அவர்? போலீசார் விசாரணை
    X

    ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பயணி பலி யார் அவர்? போலீசார் விசாரணை

    ஈரோடு அருகே ஓடும் ரெயில் இருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் நுழைவுவாயில் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 38 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரெயிலில் அடிப்பட்டு இறந்தவர் பையில் கோவையில் இருந்து சேலத்துக்கு செல்லும் ரெயில் டிக்கெட் இருந்தது. இதன் மூலம் அந்த நபர் ரெயிலில் பயணம் செய்த போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்தது தெரிய வந்துள்ளது.

    எனினும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இறந்தவர் பையில் ஒரு செல்போன் நம்பர் உள்ளது. அதை வைத்து போலீசார் இறந்த நபர் குறித்து விவரங்களை சேகரித்து வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×