search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே நாளில் மேலும் 2 அடி கூடியது - பவானிசாகர் அணை வேகமாக நிரம்புகிறது
    X

    ஒரே நாளில் மேலும் 2 அடி கூடியது - பவானிசாகர் அணை வேகமாக நிரம்புகிறது

    தெற்மேற்கு பருவமழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் ஒரே நாளில் அணையின் நீர்மட்டமும் 2 அடி உயர்ந்தது.
    ஈரோடு:

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தெற்மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்திருப்பதால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கிடு...கிடுவென உயர்ந்துள்ளது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 729 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று 81.50 அடியாக இருந்தது.

    இன்று அதிகாலை நிலவரப்படி நேற்றை விட 2 மடங்காக அதிகரித்து வினாடிக்கு 15 ஆயிரத்து 865 கனஅடி வீதம் புதுவெள்ளம் பாய்ந்து வருவதுபோல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஒரே நாளில் அணையின் நீர்மட்டமும் 2 அடி உயர்ந்தது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.36 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணைக்கு இதே வேகத்தில் நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் முழு கொள்ளளவை வேகமாக எட்டும் என விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    பவானிசாகர் அணை நீர்தேக்கப்பகுதியில் அணையின் இருபுறமும் வாழைகள் பயிரிடப்பட்டிருந்தது. பவானிசாகர் அணையையொட்டி உள்ள சித்தன்குட்டை பகுதியில் விவசாயிகள் கதலி, நேந்திரம் வாழைகளை பயிரிட்டிருந்தனர்.

    தண்ணீர் பாய்ந்து வருவதையொட்டி இந்த வாழை தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்து ஏராளமான வாழைகள் மூழ்கியது. இதனால் அவை அழுகும் நிலையில் உள்ளது.

    இதனால் வாழை பயிரிட்டிருந்த விவசாயிகள் சேதமான வாழைகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பவானிசாகரில் 4.2 மி.மீ மழையும், பெரும்பள்ளம் அணை பகுதியில் 4 மி.மீ மழையும் பெய்தது.
    Next Story
    ×