என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரக்கோணம் நகராட்சி ஆபீசில் தீக்குளித்த துப்புரவு தொழிலாளி பலி
அரக்கோணம்:
அரக்கோணம் நகராட்சி துப்புரவு பிரிவில் தலைமை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ரகு (வயது 46). கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதே உடல் நிலையோடு அவர், சில மாதங்களாக மது அருந்தி விட்டு பணிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மதியம் ரகுவின் மனைவி மதிய உணவு எடுத்துவந்து கொடுத்து விட்டு சென்றார். மனைவி சென்ற சில நிமிடங்களில் ரகு தனது அலுவலக வளாகத்திலேயே தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார்.
இதில் படுகாயமடைந்த அவரை சக ஊழியர்கள், மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ரகு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் முத்து ராமலிங்கம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறில் மனமுடைந்து ரகு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்