search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
    X

    தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

    தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்ததுறை சார்ந்த அலுவலகங்களில் பணிகள் முடங்கின. அலுவலகங்களும் வெறிச்சோடின.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தப்போராட்டம் தொடங்கியது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். அதற்கான அரசாணையை உடனடியாக தமிழகஅரசு வெளியிட வேண்டும். ஊரகவளர்ச்சித்துறையில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை பல்வேறு நிலைகளில் பணிபுரியும் அலுவலர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் உயரதிகாரிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்தது. போராட்டத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகங்கள், 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஊரகவளர்ச்சி துறை சார்ந்த பல்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலான அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்தனர். இதனால் மேற்கண்ட அலுவலகங்கள் நேற்று அலுவலர்களின்றி வெறிச்சோடின. பெரும்பாலான ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அலுவலகங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. இந்த அலுவலகங்களில் வழக்கமான பணிகள் முடங்கின. இந்த அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகள் மற்றும் சான்றிதழ்கள் பெறுவதற்காக வந்த பொதுமக்கள், அலுவலகங்கள் மூடப்பட்டிருந்ததால் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்து வரும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிகள் முற்றிலும் முடங்கியது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் யாரும் இல்லாமல் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். 
    Next Story
    ×