search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் ரூ. 1½ லட்சம் - நகை கொள்ளை
    X

    திருவாரூரில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் ரூ. 1½ லட்சம் - நகை கொள்ளை

    தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் ரூ. 1½ லட்சம் பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து திருவாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே டவுன் திருமஞ்சண வீதி பகுதியைச் சேர்ந்தவர் நாகவல்லி (வயது 37). இவர் திருவாரூர் கடை வீதியில் பழக்கடை வைத்துள்ளார்.

    இந்த நிலையில் நாகவல்லி நேற்று கடையில் விற்பனையான ரூ.1½ லட்சம் பணத்தை எடுத்து கொண்டு இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் விற்னையான பணம் மற்றும் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை கழட்டி தலையணையின் அருகே வைத்து விட்டு தூங்கினார்.

    இதையடுத்து காலையில் எழுந்து பார்த்த போது நகை, பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகவல்லி பல இடங்களில் தேடி பார்த்தார். நள்ளிரவில் தூங்கும் போது மர்ம நபர், பணம்- நகையை திருடி சென்றது தெரியவந்தது.

    பின்னர் இது குறித்து திருவாரூர் நகர போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×