என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூரில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் ரூ. 1½ லட்சம் - நகை கொள்ளை
Byமாலை மலர்4 July 2018 4:27 PM GMT (Updated: 4 July 2018 4:27 PM GMT)
தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் ரூ. 1½ லட்சம் பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து திருவாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே டவுன் திருமஞ்சண வீதி பகுதியைச் சேர்ந்தவர் நாகவல்லி (வயது 37). இவர் திருவாரூர் கடை வீதியில் பழக்கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில் நாகவல்லி நேற்று கடையில் விற்பனையான ரூ.1½ லட்சம் பணத்தை எடுத்து கொண்டு இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் விற்னையான பணம் மற்றும் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை கழட்டி தலையணையின் அருகே வைத்து விட்டு தூங்கினார்.
இதையடுத்து காலையில் எழுந்து பார்த்த போது நகை, பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகவல்லி பல இடங்களில் தேடி பார்த்தார். நள்ளிரவில் தூங்கும் போது மர்ம நபர், பணம்- நகையை திருடி சென்றது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து திருவாரூர் நகர போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X