என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்த வாலிபர் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு வளையக்காரவீதி ஜெயராம்சிங் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 26). இவருக்கு திருமணம் ஆகவில்லை. மணிகண்டன் பி.காம் முடித்துவிட்டு மொடக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். மணிகண்டன் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி செலவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்து உள்ளார். இதன்காரணமாக அவரால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. ஆனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு உள்ளனர்.
கடன் தொல்லையால் மனவேதனை அடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அவருடைய பெற்றோர், மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு வளையக்காரவீதி ஜெயராம்சிங் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 26). இவருக்கு திருமணம் ஆகவில்லை. மணிகண்டன் பி.காம் முடித்துவிட்டு மொடக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். மணிகண்டன் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி செலவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்து உள்ளார். இதன்காரணமாக அவரால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. ஆனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு உள்ளனர்.
கடன் தொல்லையால் மனவேதனை அடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அவருடைய பெற்றோர், மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






