search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமண விழா விருந்தில் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பால் மரணம்
    X

    திருமண விழா விருந்தில் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பால் மரணம்

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் திருமண விழா விருந்தில் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    சீர்காழி அருகே உள்ள கன்னியாகுடி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன்கள் கார்த்திக் (25), பிரபாகரன். இவர்கள் சென்னையில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் நேற்று இரவு நடைபெற்ற நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கார்த்திக்கும், பிரபாகரனும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரியாணி மற்றும் அசைவ உணவுகள் விருந்தில் பரிமாறப்பட்டது.

    பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்த கார்த்திக்கிற்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து கீழே சாய்ந்தார். உடனடியாக அவரை செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மாரடைப்பால் உயிரிழந்த கார்த்திக்கிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. #Tamilnews
    Next Story
    ×