என் மலர்
செய்திகள்

சென்னையில் மாணவர் அணி நிர்வாகிகளுடன் சரத்குமார் கலந்துரையாடல்
சென்னை:
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மாணவர் அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். இதில் மாநில மாணவர் அணி செயலாளர் எட்வின் நோயல் மற்றும் மாநில மாணவர் அணி நிர்வாகிகள், மாவட்ட மாணவர் அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் துணை பொது செயலாளர்கள் சேவியர், சுந்தர், ஈஸ்வரன், தலைமை நிலைய செயலாளர் பாகீரதி, பொருளாளர் ஏ.எம். சுந்தரேசன், கொள்கைபரப்பு செயலாளர் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கட்சியை மாணவர்கள் மத்தியில் வளர்ப்பது பற்றி விவாதித்தனர்.
நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்த சரத்குமார், அவர்களிடம் கட்சியை பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
குறிப்பாக மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கான தேவைகள் பற்றி கட்சியின் மூலம் அரசின் கவனத்துக்கு எடுத்து சென்று மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்றனர். #sarathkumar