என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பசுமை வழிச்சாலைக்கு மரங்கள் வெட்ட எதிர்ப்பு: மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
Byமாலை மலர்29 Jun 2018 10:11 AM GMT (Updated: 29 Jun 2018 10:11 AM GMT)
சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் இதற்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #chennaisalem8wayroad
சென்னை:
சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டது. எனவே, பசுமை வழிச்சாலைக்கு மரங்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
நிலம் கையகப்படுத்தற்கு முன் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். காடுகளை அழித்து தார் சாலை அமைத்தால் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்படும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், சுப்பிரமணியம் ஆகியோர் இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற ஜூலை 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #chennaisalem8wayroad
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X