என் மலர்
செய்திகள்

மடிப்பாக்கத்தில் வேலை வாங்கி தருவதாக கல்லூரி மாணவர்களிடம் மோசடி - வாலிபர் கைது
மடிப்பாக்கத்தில் வேலை வாங்கி தருவதாக கல்லூரி மாணவர்களிடம் மோசடியில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் இன்பென்ட்ராஜ். கல்லூரி மாணவர். இவர் மடிப்பாக்கம் போலீசில் அளித்த புகாரில், “வாலிபர் ஒருவர் தனக்கு டேட்டா எண்டரி ஆபரேட்டர் வேலை வாங்கி தருவதாக பணம் ஏமாற்றி விட்டதாக” கூறி இருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மடிப்பாக்கம் அருணாச்சலம் நகரைச் சேர்ந்த மேத்யூஸ் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகளிடம் பகுதி நேரமாகவும், நிரந்தரமாகவும் டேட்டா எண்டரி ஆபரேட்டர் வேலை தருவதாக பணம் வசூல் செய்து ஏமாற்றி இருப்பது தெரிந்தது. சுமார் ரூ.3 லட்சம் வரை மாணவ-மாணவிகளிடம் வசூல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Next Story