search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே கல்லூரி மாணவி கடத்தல்
    X

    மதுரை அருகே கல்லூரி மாணவி கடத்தல்

    மதுரை அருகே கடத்தப்பட்ட இளம்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூரை சேர்ந்தவர் சின்னழகன். இவரது மகள் பாண்டிமீனா (வயது 19). கல்லூரி மாணவி.

    இவர் அழகர்நாயக்கன் பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார். இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து கல்லூரிக்கு செல்வதற்காக அய்யூர் புறப்பட்டதாக தெரிகிறது.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் பாண்டிமீனாவை கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அலங்கா நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×