search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கிராம நிர்வாக அலுவலர் பலி
    X

    விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கிராம நிர்வாக அலுவலர் பலி

    விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கிராம நிர்வாக அலுவலர் இறந்தார்.
    விழுப்புரம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் அரசு மகன் கார்த்திக் (வயது 36). இவர் விழுப்புரம் தந்தை பெரியார் நகரில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்து விழுப்புரம் அருகே உள்ள சின்னதச்சூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு வந்துவிட்டு மீண்டும் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டார்.

    விழுப்புரம் பெரியார் நகர் நுழைவுவாயில் அருகில் திரும்பும்போது எதிரே வந்த வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக கார்த்திக் திடீரென ‘பிரேக்’ போட்டார். இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததில் கார்த்திக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×