என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கிராம நிர்வாக அலுவலர் பலி
Byமாலை மலர்24 Jun 2018 4:02 PM GMT (Updated: 24 Jun 2018 4:02 PM GMT)
விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கிராம நிர்வாக அலுவலர் இறந்தார்.
விழுப்புரம்:
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் அரசு மகன் கார்த்திக் (வயது 36). இவர் விழுப்புரம் தந்தை பெரியார் நகரில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்து விழுப்புரம் அருகே உள்ள சின்னதச்சூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு வந்துவிட்டு மீண்டும் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டார்.
விழுப்புரம் பெரியார் நகர் நுழைவுவாயில் அருகில் திரும்பும்போது எதிரே வந்த வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக கார்த்திக் திடீரென ‘பிரேக்’ போட்டார். இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததில் கார்த்திக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் அரசு மகன் கார்த்திக் (வயது 36). இவர் விழுப்புரம் தந்தை பெரியார் நகரில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்து விழுப்புரம் அருகே உள்ள சின்னதச்சூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு வந்துவிட்டு மீண்டும் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டார்.
விழுப்புரம் பெரியார் நகர் நுழைவுவாயில் அருகில் திரும்பும்போது எதிரே வந்த வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக கார்த்திக் திடீரென ‘பிரேக்’ போட்டார். இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததில் கார்த்திக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X