என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மன்னார்குடி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த மாணவர் மரணம்
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே உள்ள பருத்தி கோட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுந்தரரேசன் (வயது 10). இவர் அதே பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி இடைவேளை நேரத்தில் பள்ளி வளாகத்தில் நின்ற சுந்தரேசன் அங்கு மாமரத்தில் மாங்காய் காய்த்து தொங்குவதை கண்டதும் அதை சாப்பிட ஆசை பட்டார்.
இதைத்தொடர்ந்து மரத்தின் கிளை ஏறி மாங்காய்பறித்த சுந்தரேசன் கால் தவறி கீழே விழுந்தார். சுமார் 10 அடி உயரத்தில் இருந்து விழுந்த அந்த மாணவர் படுகாயம் அடைந்தார். அவரை ஆசிரியர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில் வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாங்காய் ஆசை மாணவர் உயிரை பறித்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்