search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்
    X

    துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது. #jeyalalithadeath #arumugasamycommission #gurumurthy
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து எழுந்த சந்தேகத்தை அடுத்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை  நடைபெற்று வருகிறது.


    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதம் நீட்டித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2-வது முறையாக ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    பா.ஜ.க. ஆதரவாளரும், ஆடிட்டர் குருமூர்த்தி வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், மருத்துவர் சிவக்குமார்  ஜூன் 25 , மருத்துவர் நளினி, செவிலியர் பிரேமா ஆன்டனி 26-ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  #jeyalalithadeath #arumugasamycommission #gurumurthy
     
    Next Story
    ×