என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
வீரப்பன்சத்திரத்தில் இன்று சாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு:
ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று பர்கூர் மலைப்பகுதி மற்றும் காளிமலை பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள் மாநில தலைவர் வரதராஜு தலைமையில் திரண்டனர். மொத்தம் 800-க்கும் மேற் பட்டவர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
28 ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களுக்கு இதுவரை சாதி சான்றிதழ்கள் தரவில்லை. இதனால் எங்களால் அரசு சலுகை, மானியம் என எதுவும் பெற முடியவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் தங்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்களும் தங்களது குழந்தைகளுடன் வந்து கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் கூறும் போது, ‘‘28 ஆண்டு காலமாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். சாதி சான்றிதழ் கேட்டு பல முறை மனுக்கள் கொடுத்து விட்டோம். இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்’’ என்று கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்