என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேலத்துக்கு காரில் கடத்தப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மதுப்பாடில்கள் பறிமுதல்: வாலிபர் கைது
விழுப்புரம்:
புதுவையிலிருந்து தமிழகத்துக்கு மதுப்பாட்டில்கள் கடத்துபடுவதை தடுக்கும் பொருட்டு விழுப்புரத்தில் மதுவிலக்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கம் போல் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள கெங்கராய பாளையம் மது விலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை சோதனை செய்த போது அதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.
இதைத் தொடர்ந்து கார் டிரைவரிடம் நடத் திய விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த மேல் தொம்மை பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் (வயது 20) என்பதும் அவர் புதுவையிலிருந்து சேலத்துக்கு மதுப்பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது.
அதன் பின்னர் கார் டிரைவர் நிதிஷ்குமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மதுப்பாட்டில்களையும் காரையும் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்