என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கணவர் குடிப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்16 Jun 2018 4:55 PM GMT (Updated: 16 Jun 2018 4:55 PM GMT)
கூடுவாஞ்சேரி அருகே கணவர் குடிப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் மனம் உடைந்த் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் அன்னை இந்திரா காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி(வயது33), இவரது கணவர் பழனி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அவரது மனைவி வலியுறுத்தி வந்தார். ஆனால் அவர் குடிப்பழக்கத்தை கைவிட மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த மனைவி ஜெயந்தி கடந்த 10-ந்தேதி வீட்டில் மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக ஜெயந்தி உயிரிழந்தார்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X