search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் அருகே நண்பனுடன் தகராறு செய்த வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
    X

    கும்பகோணம் அருகே நண்பனுடன் தகராறு செய்த வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

    கும்பகோணம் அருகே நண்பனுடன் தகராறு செய்த வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் சோலையப்பன் தெருவை சேர்ந்த ராஜி மகன் சரவணன் (வயது 21). இவர் பெருமாண்டி பகுதியில் நடந்து சென்றபோது பெருமாண்டியை சேர்ந்த மணிசங்கர் (26) என்பவர் மீது மோதி விட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மணிசங்கரும், சரவணனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது மணிசங்கரின் நண்பரான சுந்தர் (24) என்பவர் கத்தியால் சரவணனை குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் காயமடைந்த சரவணன் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.

    Next Story
    ×