search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நதிநீர் மீட்பு வெற்றி பொதுக்கூட்டம்- மயிலாடுதுறையில் 18-ந்தேதி முதல்வர் பழனிசாமி பேசுகிறார்
    X

    காவிரி நதிநீர் மீட்பு வெற்றி பொதுக்கூட்டம்- மயிலாடுதுறையில் 18-ந்தேதி முதல்வர் பழனிசாமி பேசுகிறார்

    காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் வருகிற 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. வருகிற 18-ந் தேதி மயிலாடுதுறையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
    மயிலாடுதுறை:

    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் வருகிற 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. வருகிற 18-ந் தேதி மயிலாடுதுறையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    திருவாரூரில் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசுகிறார்கள்.

    காவிரி பிரச்சனையில் தமிழக அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வந்தது. இதைதொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது.

    காவிரி நீரை தமிழகத்துக்கு பெற்று தருவதில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரது வழிகாட்டுதலின்பேரில் காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்து உள்ளனர். உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்று தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மற்றும் ஜூலை 11-ந்தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலம் மற்றும் காரைக்காலிலும் ‘காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி’ விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

    அதன்படி மயிலாடுதுறையில் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றுகின்றார்.

    மயிலாடுதுறைக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி திருச்சி சரக போலீஸ் ஐ.ஜி. வரதராஜுலு, தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் ஆகியோர் நேரில் சென்று பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட மயிலாடுதுறை சின்னக்கடைத்தெரு இடத்தை பார்வையிட்டு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது முதல்- அமைச்சர் பொதுக்கூட்ட மேடைக்கு வரும் பாதை மற்றும் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் வரும் பாதை, திரும்பி செல்லும் பாதை, கார்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி உள்ள நகராட்சி மருத்துவமனை வளாக திடல் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மேலும், பாதுகாப்பு காரணங்களையொட்டி போலீசார் பணிபுரிய வேண்டிய இடங்கள், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய இடங்கள், மாற்றம் செய்யப்பட வேண்டிய போக்குவரத்து வழித்தடங்கள், திடீர் மழை பெய்தால் பொதுமக்கள் சிரமப்படாமல் அமரும் வசதி உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து போலீஸ் ஐ.ஜி. வரதராஜுலு போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். #TNCM #Edappadipalanisamy
    Next Story
    ×