என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்தவருக்கு தர்ம அடி
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே உள்ள அகரம் பெரியமல்லணம்பட்டி காலனித் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி தங்கமணி (வயது 38). இவர் நேற்று தனது வீட்டு குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் (55) என்பவர் அவர் குளிப்பதை செல்போனில் படம் பிடித்துக் கொண்டு இருந்தார்.
திடீரென இதனை கவனித்த தங்கமணி அவரை சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் அவரது ஆடைகளை களைந்து இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
உடனே தங்கமணி கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து நடந்த விபரங்களை கூறினார். பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து தாடிக்கொம்பு போலீசில் ஒப்படைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணி வழக்குபதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே இது போன்ற பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்