search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்தவருக்கு தர்ம அடி
    X

    திண்டுக்கல் அருகே பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்தவருக்கு தர்ம அடி

    பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்தவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே உள்ள அகரம் பெரியமல்லணம்பட்டி காலனித் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி தங்கமணி (வயது 38). இவர் நேற்று தனது வீட்டு குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் (55) என்பவர் அவர் குளிப்பதை செல்போனில் படம் பிடித்துக் கொண்டு இருந்தார்.

    திடீரென இதனை கவனித்த தங்கமணி அவரை சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் அவரது ஆடைகளை களைந்து இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    உடனே தங்கமணி கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து நடந்த விபரங்களை கூறினார். பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து தாடிக்கொம்பு போலீசில் ஒப்படைத்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணி வழக்குபதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே இது போன்ற பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×